Sunday, November 11, 2007
ஒண்ணுமே புரியலைடா, சாமியோவ்!
சோதிடம்
தொடரும் அநியாயங்கள் - இடப் பங்கீடு
சென்ற ஆண்டு ஏறத்தாழ இதே நேரத்தில் (06.06.2006) நான் இடப் பங்கீடு பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் U.P.S.C. தன் தேர்வு முறைகளில் நடத்தும் அநியாயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதே சமயத்தில் ஷரத் யாதவ் இந்துவில் எழுதிருந்த ஒரு நடுப்பக்கக் கட்டுரையையும் பதிவிட்டிருந்தேன். U.P.S.C. தேர்வுகளில் உயர் மதிப்பெண் எடுத்துத் தேர்வுபெறும் O.B.C., S.C.,/S.T. -களை O.C. quota-வில் காண்பிக்காது விட்டு,(இது முறைகேடானது என்று உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டும்) இடப்பங்கீட்டு மோசடி செய்துவந்ததை எழுதியிருந்தேன். இந்த ஆண்டும் தேர்வாளர்கள் தங்கள் திறமையை மீண்டும் அரங்கேற்றியுள்ளார்கள். அதனை எதித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கொன்று பதியப்பட்டுள்ளது.
நீங்கள் ஆண்டுதோறும் இப்படி வழக்கு போட்டுக்கொண்டேயிருங்கள்;நாங்கள் எங்கள் மோசடியைத் தொடர்ந்து நடத்திக்கொண்டேயிருப்போம் என்ற நிலை நீடிக்கும்போது நம் சட்டங்கள், சட்டங்களின் காவலான நீதிமன்றங்கள், நீதியை நிலைநாட்ட வேண்டிய அரசு என்று அத்தனை துறைகள் மீதும் நம்பிக்கையில்லாமல் போய்விடுகிறது. எல்லாமே 'அவர்கள்' கையில்; இதில் நாமென்ன செய்ய முடியும் என்ற கையறு நிலைக்குத்தான் வரவேண்டியதுள்ளது. சமூகநீதிக்குப் போராடுவதாகக் கூறும் அரசியல், சமூகக் கட்சிகளாவது இந்த தொடரும் அநியாயங்களுக்கு எதிர்க்குரல் கொடுக்கக் கூடாதா? இந்த தொடரும் அநியாயங்களை யாரும் நிறுத்தவே முடியாதா?
இந்த வழக்கு பற்றிய இன்றைய (14.07.2007) இந்துவில் வந்துள்ள செய்தி:
The petitioners contended that the UPSC continued to flout the Centre’s directives and the Supreme Court rulings, besides the constitutional provisions, by not including successful candidates from reserved categories in the open category.
The petitions said nearly 60 candidates belonging to the open category were unlawfully included in the merit list.
06.06.2006 அன்று நானெழுதிய பதிவில் வழக்கறிஞர் திரு. ப்ரபு ராஜதுரை அளித்திருந்த பின்னூட்டம்:
PRABHU RAJADURAI said…
உங்களில் யாரும் இதை அறிந்திருக்கிறீர்களா என்பது தெரியாது. மண்டல் கமிஷன் பரிந்துரையினை ஏற்று மத்திய அரசு பணிகளிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏற்பட்ட பிறகு, இட ஒதுக்கீட்டினையே கேலிக்குறியதாக்கும் ஒரு மோசடி நடைபெற்றது. அதாவது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அவர்களை பொது வகுப்பில் தேர்ந்தெடுக்காமல் ஒதுக்கீட்டு பிரிவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் விளைவு தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவருக்கான ஐம்பது சதவீதம் போக மீதி ஐம்பது சதவீதம் இவர்கள் அல்லாத முற்படுத்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.
இப்படி நடக்க முடியுமா என்று யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், இத்தகைய ஒரு செயலை எதிர்த்து, எனது நண்பர் சென்னையிலுள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (CAT)ஒரு வழக்கு தொடர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட முழு விபரத்தினையும் தர முடியும். வேடிக்கை என்னவென்றால், இந்த தீர்ப்பினை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் அந்த வழக்கினை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்தது வேறு விஷயம்.
இந்துவில் வந்திருந்த ஷரத் யாதவ் எழுதிய கட்டுரையை 09.07.2006-ல் பதிப்பித்திருந்தேன்.அதில் இது தொடர்பான பகுதி மீண்டும் இங்கே ...
...but the UPSC has continued to deny meritorious candidates of reserved categories the right to join the civil services as general category candidates.
People controlling the UPSC and DoPT are so strongly motivated against the candidates of reserved categories that they can go to any extent in their adventure to block the entry of reserved categories in the civil services.
அரை மணி நேரத்துக்கு முன்னால விசிடியில் ஒரு படம் பார்த்தேன்.மலையாளப் படம். படம் முடிஞ்ச பிறகும் அந்த இடத்திலேயே ஆணியடிச்சது மாதிரி உட்கார்ந்திருந்தேன்.ஏறக்குறைய இருபது இருபத்தஞ்சு நிமிஷம். ஒண்ணுமே செய்யத் தோணலை.என்னென்னமோ மனசுக்குள்ள ஓடியது.கஷ்டமா இருந்தது.மனசு ரொம்ப பாரமா ஆயிரிச்சி.வசனங்கள் அனேகமா எதுவுமே புரியவில்லைதான்.கேரளாவின் எந்தப் பகுதின்னும் தெரியலை.Backwaters உள்ள அந்தப் பகுதி மிகவும் புதுசா தோன்றியது. அழகான இடம்.நல்ல மக்கள்.இடத்தைப் போலவே மக்கள் மனசுக்குள் எல்லாம் ஈரம்.இருட்டை இருட்டாக காண்பிக்கும் படப் பிடிப்பு.நடிப்பு, கதை, படப்பிடிப்பு - சுத்தமாக எதிலும் மிகையில்லை.cinematic, dramatic அப்டின்னு எல்லாம் சொல்லுவாங்களே.அவைகளுக்கு இப்படத்தில் இடமே இல்லை.எப்படி இப்படி படம் எடுக்கிறார்கள்?இந்த மாதிரி படம் எடுக்கும் துணிச்சலைத் தரும் மக்களை எப்படிப் பாராட்டுவது?இப்படியெல்லாம் நினச்சிக்கிட்டு இருந்தப்போ ... நமது தமிழ்ப்பட டைரடக்கர்கள் ஒவ்வொருவராக மனசுக்குள் வந்து நின்றார்கள். அடச் சீ! போங்கடான்னு சொல்லணும்போல இருந்தால் அது என் தப்பா?
குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டு கேரளாவிற்கு வந்து சேர்ந்த மொழி தெரியாத சிறுவன்.மம்முட்டியின் குடும்பத்தோடு ஐக்கியமாகிறான்.சட்டதிட்டங்களின் குறுக்கீடு.அதன்படி அவன் குடும்பத்தைத் தேடி பையனோடு மம்முட்டி குஜராத் பயணம்.அழிந்து உருக்குலைந்த வீடு.அனாதையான சிறு பிள்ளைகளோடு பையன் சேர்க்கப் படுகிறான்.அறியாச் சிறுவனின் மனத்தில் குடும்பம் வந்துவிடும் என்ற நம்பிக்கை.அந்த நம்பிக்கையில்லாமல் பையனை விட்டுவிட்டு வரும் மம்முட்டி.சமீபத்தில் பார்த்த சில ஈரானியப் படங்களைப் பார்த்து(Where is my friend's house?) பெருமூச்சு விட்டதுண்டு.இப்படியெல்லாம் என்றைக்கு நம்மூரில் படம் எடுப்பார்கள் என்று நினத்ததுண்டு.பக்கத்தூரிலாவது எடுத்திருக்கிறார்களே.மலையாளப் படங்களின் உச்சங்களைப் பார்த்து மலைத்தது உண்டு.இதோ இன்னொரு படம்.படப் பெயர்: காழ்ச்சா.Tag line Edge of Love இயக்குனர்: Blessyநடிப்பு: மம்முட்டி ...நம்ம ஊரு நிலைமைக்கு யார் காரணம்? நிச்சயமா நம்மை மடையர்களாக நினைத்து (புரிந்துகொண்டு..)படம் எடுக்கும் நம் டைரடக்கர்களா? என்ன மசாலா கொடுத்தாலும் விசிலடிச்சி படம் பார்க்கும் நாம்தானா? இதையும் தாண்டி நம் ஊடகங்கள் ... அடடா, மலைக்கோட்டை படத்தின் முன்னோட்டம் பார்க்கும்போதே படத்தின் அருமை புரிந்துவிடுகிறது.
ஆனால், தமிழ்நாட்டின் நம்பர் 1 ஆ.வி.யில் அதற்கு நூத்துக்கு நாற்பத்து ஒன்று. தாராளப் ப்ரபுகள் .. சில வாத்தியார்கள் மாதிரி .. நிறைய மார்க் போட்டுட்டா பசங்கட்ட இருந்து எந்த தொல்லையும் இருக்காதே .. என்னமோ நடக்குது ...